இலங்கையில் நேற்றும் 8 பேர் கொரோனா தொற்றினால் பலி!
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. இதன்படி நேற்றய தினம் மட்டும் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று 726 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 68,576 ஆக உயர்வடைந்துள்ளது.
இவர்களில் 62,594 பேர் குணமடைந்துள்ளதோடு 5,631 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் 726 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.
No comments