Header Ads

நாட்டில் மேலும் 539 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!



நாட்டில் மேலும் 539 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 71 ஆயிரத்து 750 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 591 பேர் குணமடைந்ததை அடுத்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 65 ஆயிரத்து 644 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது தொற்று உறுதியானோரில் 5 ஆயிரத்து 736 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 694 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

மேலும் இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 370 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.