நாட்டில் மேலும் 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
நாட்டில் மேலும் 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 77 ஆயிரத்து 553 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 747 பேர் குணமடைந்த நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 71 ஆயிரத்து 176 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது தொற்று உறுதியானோரில் 5 ஆயிரத்து 968 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை கொரோனா தொற்றினால் இதுவரை 409 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments