Header Ads

கொழும்பில் 18 மாத குழந்தையொன்றின் உயிரை பறித்த கொரோனா


 18 மாத ஆண் குழந்தையொன்று நேற்றைய தினம் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கொழும்பு 02 பகுதியைச் சேர்ந்த 18 மாத ஆண் குழந்தை யொன்று கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளது.

பொரளை லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக 2021 உயிரிழந்துள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றால் அடையாளம் காணப் பட்ட நிலையில் மேலும் 06 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.