Header Ads

கொழும்பில் 16 மணிநேர நீர்வெட்டு!



கொழும்பை அண்மித்த சில பகுதிகளில் 16 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதனடிப்படையில் கொழும்பு, தெஹிவளை – கல்கிஸ்ஸ, கோட்டே மற்றும் கடுவல ஆகிய மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகள் மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் கொலன்னாவ நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படுகிறது.அத்துடன் கொட்டிகாவத்த மற்றும் முல்லேரியா ஆகிய பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளிலும் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படுகிறது. அத்தியவசிய திருத்த வேலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.