Header Ads

இலங்கையில் கொரோனா தொற்றினால் பரிதாபமாக உயிரிழந்த 04 மாதக் குழந்தை..!



கோவிட் 19 தொற்று காரணமாக 4 மாத குழந்தையொன்று, பேரதெனியா சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.கண்டியின் நுகவெலவை சேர்ந்த அமோதய சந்தீப்ப கருணசிங்க என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.

இந்தக் குழந்தைக்கு நான்கு மாதத்தில் தடுப்பூசியொன்று கடந்த 12 ஆம் திகதிதிட்டபஜ்ஜல வைத்தியசாலையில் வழங்கப்பட்டது. மறுநாள் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டதுடன், சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது. காலையில் அருகிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றிற்கு குழந்தையை தாயார் அழைத்து சென்றார்.

எனினும், குழந்தை குணமடையாததை தொடர்ந்து, அன்று மதியம் பேரதெனியா சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.குழந்தை ஆன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதில் கொரோனா தொற்று இல்லையென முடிவு வெளியானது.எனினும், சுவாச சிக்கல் இருந்ததால் பிசிஆர் சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அன்றைய தினமே குழந்தை உயிரிழந்துள்ளது. பிசிஆர் முடிவில் குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

குழந்தையின் தந்தை தற்போது இத்தாலியில் பணிபுரிகிறார். குழந்தை பிறப்பதற்கு சில மாதங்களின் முன்னர்தான் அவர் இத்தாலி சென்றிருந்தார். அவர் தனது குழந்தையின் முகத்தை ஒருமுறை கூட பார்க்கவில்லையென மரணவிசாரணை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களில் மேலதிக பிரேத பரிசோதனைகள் நடத்தப்படுவதில்லை. எனினும், குழந்தையின் உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் குழந்தை உயிரிழந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை கிடைக்கும் வரை குழந்தையின் உடல் தகனம் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இதேவேளை, கொரோனா தொற்றினால் கண்டி மாவட்டத்தில் இதுவரை 38 மரணங்கள் பதிவாகியுள்ளதாக மத்திய மாகாண சுகாதார சேவைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.


No comments

Powered by Blogger.