Header Ads

கொரோனா தடுப்பூசி அளிப்பதை இடைநிறுத்தும் உலக நாடுகள்

 


உலக நாடுகளில் இறப்பு எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொடும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பாரிஸ், மாட்ரிட் மற்றும் லிஸ்பன் ஆகிய இடங்களில் உள்ள அதிகாரிகள் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி அளிப்பதை இடைநிறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையே பிரதான காரணம் என கூறப்படுகின்றது.

பிரான்சில், நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு அடுத்த நான்கு வாரங்கள் வரை புதிதாக தடுப்பூசி பெற முடியாத இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே முதல் டோஸ் எடுத்துக்கொண்ட மக்களுக்கு, தங்களின் இரண்டாவது டோஸ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

போர்த்துகளில் இரண்டு மாதங்கள் வரை தடுப்பூசி வழங்குவதில் தாமதம் ஏற்படும், ஸ்பெயினில் 10 நாட்களுக்கு தடுப்பூசி விநியோகம் இருக்காது என அதிகாரிகளால் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே நம்பிக்கை அளிக்கும் வகையில் பிரித்தானியாவின் புதிய நோவாவாக்ஸ் தடுப்பூசி அனுமதி கிடைத்ததும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும் என தெரிய வந்துள்ளது.

முதற்கட்டமாக 60 மில்லியன் நோவாவாக்ஸ் தடுப்பூசி டோஸ்கள் தயாரிப்பில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

No comments

Powered by Blogger.