Header Ads

ஜேர்மனியில் மீண்டும் நீடிக்கப்படும் முடக்கநிலை!

 


ஜேர்மனியில் புதிய வகை உருமாறிய கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் முன்னதாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், எதிர்வரும் 31ஆம் திகதியுடன் முடிவடைய இருந்தது.

அதேபோன்று உருமாறிய கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்கநிலையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி வரை நீடிக்கப்படுவதாக ஜேர்மனி அரசு அறிவித்துள்ளது.

அதிபர் மேர்க்கெல் மற்றும் நாட்டின் 16 மாநிலங்களின் தலைவர்கள் இணைந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான கடைகள், பாடசாலைகள் மற்றும் அத்தியாவசியமற்ற வணிகங்களான உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் விளையாட்டு மையங்கள் மூடப்பட்டிருக்கும்.

முகக்கவசங்கள் குறித்த கடுமையான விதிகள் மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்யும் பணியாளர்கள் மீது அதிக பொறுப்பு ஆகியவை உள்ளடங்கப்படும்.

சமீபத்திய நாட்களில் புதிய நோய்த்தொற்றுகள் குறைந்து வருகின்றன.

தீவிர சிகிச்சை பிரிவுகளின் அழுத்தம் சற்று குறைந்துவிட்டாலும், பிரித்தானியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்டவை போன்ற தொற்று வகைகள் ஐரோப்பிய ஒன்றிய நாட்டில் பரவக்கூடும் என்று வைராலஜிஸ்டுகள் எச்சரித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.