Header Ads

இத்தாலியில் பெருகும் கொரோனா பலி எண்ணிக்கையில் உயர்வு

 


சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பட்டியலில் இத்தாலி 8-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், இத்தாலி நாட்டில் ஒரே நாளில் 22,211 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21 லட்சத்தைக் கடந்துள்ளது.

அங்கு கொரோனா தொற்றுக்கு 462 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இத்தாலியில் பலியானோர் எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்குகிறது.

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 14.79 லட்சத்தைக் கடந்துள்ளது.

இத்தாலிய அரசு பல கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்திய போதும் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.