Header Ads

பிரித்தானியாவில் பரவிய கொரோனா இலங்கையிலும்… அடையாளம் காணப்பட்ட நோயாளி

 


இலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நீர்ப்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் இருந்து இலங்கைய வந்த நபர் ஒருவருக்கு இங்கிலாந்தில் இனங்காணப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக விஷேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

வௌிநாடுகளில் இருந்து வருகை தரும் நபர்கள் தொடர்பில் கவனம் செலுத்தி மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் அடிப்படையில் குறித்த தொற்றாளர் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் நீலிக மாளவிகே மற்றும் ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைகழக ஆய்வு குழு இதனை உறுதி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.