14 வயது சிறுமியை உயிருடன் புதைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்!
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் கிராமப்பகுதி ஒன்றில் 14 வயது சிறுமி ஒருவரை உயிருடன் புதைக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
திங்கட்கிழமை சுமார் 5 மணியளவில், தவறிழைத்ததாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.
ஆனால் சில மணி நேரம் கடந்த நிலையில், சிறுமி வீடு திரும்பாதது கண்டு, கலக்கமுற்ற பெற்றோர் மற்றும் உறவினர்கள், சிறுமியை தேடி அலைந்துள்ளனர்.
இந்நிலையில் புதர்களுக்கு இடையே அழுகுரல் ஒன்று கேட்டதையடுத்து அந்த இடத்தை பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
சிறுமி கொடூரமாக தாக்கப்பட்டு, உயிருடன் புதைக்கப்பட்டுள்ளார்.
மருத்துவ சோதனையில் அவர் துஸ்பிரயோக்த்திற்கு உட்படுத்தப்பட்டது உறுதியான நிலையில், 35 வயது சந்தேக நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தின்போது, தனியாக சிக்கிய சிறுமியை, அந்த 35 வயது நபர் கடத்திச் சென்று சீரழித்துள்ளார்.
தாம் பொலிசில் சிக்க வாய்ப்பிருப்பால் அந்த நபர், சிறுமியை கல்லால் அடித்து, பின்னர் இறந்ததாக கருதி உயிருடன் இருந்த சிறுமியை புதைத்துள்ளார்.
இந்த நிலையிலேயெ சிறுமியை காணவில்லை என தேடிச் சென்ற குடும்பத்தினருக்கு புதர்களுக்கு இடையே இருந்து அழுகுரல் கேட்டுள்ளது.
இதனையடுத்து சிறுமியை மீட்ட குடும்பத்தினர், உடனே அவரை அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
பொலிசாருக்கு அடையாளம் காட்டியதை தொடர்ந்து பொலிசார் அந்த நபரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
No comments