Header Ads

ஜேர்மனிய மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துடன் எச்சரிக்கை விடுத்த பிரதமர்



 ஜேர்மனியில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கின்றமையால் கட்டுப்பாடுகள் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜேர்மன் மக்களுக்கு தொலைக்காட்சியில் புத்தாண்டு வாழ்த்தை சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கல் பகிர்ந்துகொண்டார்.

மேலும் 2021இல் கடினமான நேரங்களை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.

குளிர்காலம் இன்னமும் கடினமாக இருக்கும் என்றும் கூறியுள்ள மெர்க்கல், கொள்ளைநோய் உருவாக்கிய சவால்கள் மிக்கதாக காணப்படுகின்றது.

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக அதிகாரிகள் விதித்த கட்டுப்பாடுகளை பின்பற்றிய ஜேர்மானியர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா வைரஸ் இருப்பதை ஒப்புக்கொள்ளாத சிலர் கூறும் முரண் கோட்பாடுகள் பொய்யானவை மட்டுமல்ல, அவை பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிரானவையும் என எச்சரித்துள்ளார்.

No comments

Powered by Blogger.