பருத்தித்துறை ஓடக்கரையில் ஒருவருக்கு கொரோனா தொற்று!!
பருத்தித்துறை ஓடக்கரையைச் சேர்ந்த ஒருவருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
தனது மாமி உறவுமுறை ஒருவரின் மருத்துவ சிகிச்சைக்காக கொழும்புக்குச் சென்று அங்கு ஒரு மாதம் தங்கியிருந்த நிலையில் திரும்பிய 34 வயதுடைய குடும்பத்தலைவருக்கே இவ்வாறு கோரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அவர் கொழும்பு சென்று திரும்பிய நிலையில் குடும்பத்துடன் கடந்த 14 நாள்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் அந்த குடும்பத்தலைவரின் மாதிரிகள் இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது. அவருக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
அதனால் அவர் யாழ்ப்பாணம் கோப்பாய் கல்வியற் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் -19 சிகிச்சை நிலையத்துக்கு சிகிச்சைக்காக அனுப்பப்படவுள்ளார். அவரது குடும்பம் தொடர்ந்து சுயதனிமைப்படுவார்கள்.
No comments