Header Ads

பிரித்தானியாவுக்கு விதிக்கப்பட்ட பயண தடையை மேலும் நீடித்த கனடா

 


பிரித்தானியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவதாக அறிவித்ததை அடுத்து பல நாடுகள் பயணத் தடையை விதித்தது.

கனடாவும் முதற்கட்டமாக அந்நாட்டிலிருந்து வரும் விமானங்களுக்கு 3 நாள் தடை விதித்தது.

திங்கட்கிழமை முதல் பிரித்தானியாவுக்கு விதிக்கப்பட்ட 3 நாள் தடை முடிவுற்ற நிலையில், தடை மேலும் நீட்டிக்கப்படும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

பிரித்தானியாவிலிருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு ஜனவரி 6ம் திகதி வரை தடை விதிப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார்.

மேலும், கனடா கூடுதலாக ஒப்பந்தம் செய்த Pfizer தடுப்பூசி டோஸ்கள் ஜனவரி மாதம் கிடைக்கும் என கூறியுள்ளார்

அதேசமயம் பாதுகாப்பு ஊழியர்களின் புதிய தலைவராக Vice-Admiral Art McDonald நியமிக்கப்பட்டுள்ளதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார்.

No comments

Powered by Blogger.