பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுப்பட்ட இருவர் பலி!
பிரான்ஸில் Monétier-les-Bains (Hautes-Alpes) எனும் சிறு நகரில் பனிச்சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்துள்னர்.
மேலும் ஒருவர் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை அன்று இடம்பெற்றது.
இங்கு பனிச்சறுக்கு விளையாட்டில் ஆறு பேர் ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது பாரிய பனிச்சரிவு ஏற்பட்டு, அவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர்.
மலைப்பகுதி ஜொந்தாமினர் உடனடியாக மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
ஆறு பேரும் மீட்க்கப்பட்டு அவசரசிகிச்சை அளித்த போதிலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
No comments